சான்றிதழ் கட்டணத்தை 10 மடங்கு உயர்த்தியது அண்ணா பல்கலைக்கழகம்

23 வகையான சான்றிதழ்களுக்கு பத்து மடங்கு கட்டண உயர்வை அமல்படுத்தி அண்ணா பல்கலைக்கழகம் திடீரென அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.   தரம் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்து போனால், புதிய சான்றிதழ் வாங்குவதற்கான கட்டணத்தை…

23 வகையான சான்றிதழ்களுக்கு பத்து மடங்கு கட்டண உயர்வை அமல்படுத்தி அண்ணா பல்கலைக்கழகம் திடீரென அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

 

தரம் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்து போனால், புதிய சான்றிதழ் வாங்குவதற்கான கட்டணத்தை ரூ.300-ல் இருந்து ரூ.3,000 ஆக அண்ணா பல்கலைக்கழகம் உயர்தியுள்ளது. அதோடு பட்டம் பெற்ற சான்றிதழ் தொலைந்துவிட்டால், புதிய சான்றிதழ் பெறுவதற்கான கட்டணமும் ரூ.3,000-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது முறையாக சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால் ரூ.10,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது..

இந்த புதிய கட்டண உயர்வு, கடந்த மே மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 18% GST வரி விதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.