32.5 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

1990 முதல் அரியர் வைத்துள்ளவர்களுக்கு இறுதி வாய்ப்பு!

அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பை வழங்கியுள்ளது அண்ணா பல்கலைக் கழகம். 

கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளுக்கு தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில்,  இறுதி பருவத்தைத் தவிர மற்ற மாணவர்களுக்கு தேர்ச்சி அறிவித்தது தமிழக அரசு. அதேபோல, அரியர் வைத்து அதற்கான தேர்வை எழுதி கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கும்  தேர்ச்சி அறிவிக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்றம் அரியர் தேர்வுகளை 8 வாரத்துக்குள் நடத்த உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் இன்று தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அரியர் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 1990 முதல் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் படித்து, அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு இறுதியாக 3 வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதுபோலவே பிற பொறியியல் கல்லூரிகள், தொலைதூரக் கல்வியில் கடந்த 2001 முதல் அரியர் வைத்துள்ளவர்களுக்கும் இறுதி வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட்- செப்டம்பர் 2021, பிப்ரவரி 2022, ஆகஸ்ட் 2022 ஆகிய மூன்று செமஸ்டர்களில் தேர்வு எழுதலாம். இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி அரியர் பாடங்களில் தேர்ச்சி அடைந்துகொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக முழுமையான விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading