முக்கியச் செய்திகள் இந்தியா

உத்தரகாண்ட் வெள்ளப் பாதிப்பு: அமைச்சர் அமித் ஷா ஆய்வு

உத்தரகாண்ட் மாநிலத்தில் நேர்ந்த வெள்ள பாதிப்புகள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டரில் பயணித்து ஆய்வு மேற்கொண்டார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு, மழைவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. சாலைகள், பாலங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் வீடுகள் இடிந்துள்ளன. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த மழை வெள்ளத்தில் குமாவோன் (Kumaon region) பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பார்வையிட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டேரோடூன் வந்தார். நைனிடால், சம்பவாட், அல்மொரா, பிதோரகர்க், உதம்சிங் நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேர்ந்த வெள்ள பாதிப்புகள் குறித்து அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் டாமி, ஆளுநர் (Gurmit Singh) குர்மித் சிங் ஆகியோருடன் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அமித்ஷா, நிலச்சரிவு, மழை வெள்ளத்தில் சிக்கி 3, 500 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மாயமான 11 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்திப்பு – பிரச்சாரத்திற்கு வருமாறு அழைப்பு

G SaravanaKumar

பாஜக மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கிய மாநில தலைவர்; நன்றி தெரிவித்த டாக்டர் சரவணன்

Arivazhagan Chinnasamy

‘தேர்தலில் போட்டியிட துணிந்த மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தான்’ – கமல்ஹாசன்

Arivazhagan Chinnasamy