மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும் நாளை சந்தித்து பேசுகின்றனர்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு, நாளை பிற்பகல் 1.30 மணி அளவில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்திக்க உள்ளது. இதற்காக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். தொடர்ந்து, மாலையில் அனைத்து கட்சி பிரநிதிகளும் டெல்லி விரைந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, காங்கிரஸ் சார்பில் கோபண்ணா, பாமக சார்பில் ஜி.கே.மணி, பாஜக சார்பில் பால் கனகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கே.பாலகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர், டெல்லி புறப்பட்டு சென்றனர். மேலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்,
புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தியார் ஆகியோரும் டெல்லி விரைந்தனர்.