தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் விரைவில் நிச்சயம் நிறைவேற்றப்படும். 5 வருடங்கள் பொறுத்திருக்கத் தேவையில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது கலைஞர் அருங்காட்சியகம் மற்றும் நெல் சேமிப்புக் கிடங்கு கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர், சந்நிதி தெருவுக்கு வந்த முதல்வர், அங்கு காத்திருந்த பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்கவும்: “இஸ்லாமியர்களை தீவிரவாதியாக மத்திய அரசு சித்தரிக்கிறது”- அமைச்சர் நாசர்
தொடர்ந்து கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர், திருவாரூர் கமலாலயக் குளத்தின் வடக்குக் கரையிலிருந்து படகின் பயணம் செய்து குளத்தின் நடுவில் உள்ள நடுக்குள நாகநாத சுவாமி கோயிலுக்குச் சென்று பார்வையிட்டார்.
இன்று திருவாரூர் மன்னார்குடியில் திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது பேசிய முதலமைச்சர், திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்யும் போது என்னையே அறியாமல் கம்பீரமாக இருக்கிறேன். திருவாரூர் வந்துள்ளது எனக்குள் இனம்புரியாத மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீர்திருத்தத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கியது அண்ணா தலைமையிலான திமுக அரசு.
மக்கள் போற்றும் திராவிடமாடல் ஆட்சியாக இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கக் கூடிய ஆட்சி உங்களுடைய ஆட்சி. கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை தொடங்கி வைத்து ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்து வருகிறேன்.
பருவம் தவறிய மழையால் பாதித்த விவசாயிகளுக்கு ஒரு வாரத்தில் நிவாரணம் வழங்கப்படும். கடந்த அதிமுக அரசு கஜானாவை காலி செய்யாமல் இருந்திருந்தால் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றபட்டு இருக்கும். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் விரைவில் நிச்சயம் நிறைவேற்றப்படும். 5 வருடங்கள் பொறுத்திருக்கத் தேவையில்லை என்று முதலமைச்சர் கூறினார்.