10,11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த, மாற்றுத்திறனாளி தனித் தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
12-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவித்ததைப் போல, 12-ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளை, தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்திருந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள், தேர்வு எழுதுவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பரவல் காரண மாக தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், துணைத் தேர்வுகளை, தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்திருந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனை வரும் தேர்ச்சி பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கான மதிப்பெண் வழங்கும் நடைமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.