கங்காரு வடிவ கேக்கை வெட்டுவதற்கு ரஹானே மறுப்பு தெரிவித்தது, ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி போட்டிகளில் சிறப்பாக விளையாடி உலக அளவில் பாராட்டுக்களை பெற்றது. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. சுற்றுப்பயணத்தை முடித்து இந்தியா திரும்பிய வீரர்களுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் மும்பை திரும்பிய ரஹானேவுக்கு ரசிகர்கள் கோலாகல வரவேற்பு அளித்துள்ளனர். அவர் தனது மகளுடன் சேர்ந்து கேக் வெட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கங்காரு பொம்மை வடிவ கேக் ஒன்று அவருக்காக தயார் நிலையில் இருந்தது. ஆனால் அதனை வெட்ட சென்ற ரஹானே, கங்காரு பொம்மையை பார்த்த உடனே கேக்கை வெட்ட மறுப்பு தெரிவித்து விட்டார். இதனை பார்த்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நெகிழ்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் அவரது சிறந்த குணத்தை காட்டியுள்ளதாக ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.







