கட்சியின் பதவி மற்றும் கொடியை பயன்படுத்துவது தொடர்பாக சட்ட விளக்கம் கேட்டு ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுக தலைமை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கடந்த ஜூலை 11ந்தேதி கூடிய அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்காலப்பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அந்தப்பொதுக்குழு அதிமுக சட்ட விதிகளுக்கு முரணானது என கூறும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜூலை 11ந்தேதி கூட்டப்பட்ட பொதுக்குழுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கட்சியின் ஒருங்கிணைப்பாளராக தாம் தற்போதும் தொடர்வதாக கூறும் ஓ.பன்னீர்செல்வம், சமீபத்தில் அதிமுகவிற்கு நிர்வாகிகளை நியமித்தார். இந்நிலையில், கட்சியின் பதவி மற்றும் கொடியை பயன்படுத்துவது தொடர்பாக சட்ட விளக்கம் கேட்டு ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுக தலைமை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சென்னையில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு ஜனவரி முதல் வாரத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், தம்முடைய ஆதரவு மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தை ஓபிஎஸ் நடத்தினார்.
இதனைத்தொடர்ந்து, அதிமுக கொடி மற்றும் ஒருங்கிணைப்பாளர் என கட்சி பதவியை பயன்படுத்துவது தொடர்பாக சட்ட விளக்கம் கேட்டு ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுக தலைமை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராகவும் திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராகவும் பதவி வகிப்பதை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.