24 C
Chennai
December 4, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம்

முழு ஊரடங்கு? திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

மே 2க்குப் பிறகு முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது என  திமுகவினருக்கு  மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.  கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனிடையே தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே உள்ளது. நேற்றைய நிலவரப்படி 12 ஆயிரத்தைக் கடந்து கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. 

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் திமுகவினருக்கு இன்று கடிதம் எழுதியுள்ள அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், முதல் அலை தாக்கத்தின்போது, நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது, எனினும், அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள், உளவியல் சிக்கல்கள், தனிநபர் பாதிப்புகள் இவற்றிலிருந்து இன்றுவரை முழுமையாக மீள முடியவில்லை என்று குறிப்பிட்டார். 

தொழில் வாய்ப்புகளை இழந்தோர், வேலையினைப் பறிகொடுத்தோர் இப்போதும் மன உளைச்சலில் தவிக்கின்றனர். அதனால், இந்த இரண்டாவது அலைத் தாக்கத்தின்போது குறிப்பிட்ட அளவிலான கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், பொதுமக்களும் திமுகவினரும் அவற்றுக்குக் கட்டுப்பட்டுச் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும், “மே 2க்குப் பிறகும் முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம். அதுவரை, கொரோனா பரவல் குறையும் வகையில் உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள்வோம். நமக்கு நாமே பாதுகாப்பாக இருப்போம். நம்மைப் போன்றவர்களுக்கு பக்க பலமாக நிற்போம்” என்றும் தொண்டர்களுக்கு வலியுறுத்தியுள்ளார் ஸ்டாலின். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy