முக்கியச் செய்திகள் தமிழகம்

முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் நேற்றைய நிலவரப்படி ஒரே நாளில் 12,652 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் கொரோனாவல் பதிக்கப்பட்டுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தி கொண்ட நிலையில், அவருக்கு நோய்த் தொற்று உறுதியாகி உள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பெரிய அளவில் உடல்நிலையில் பாதிப்பு இல்லாவிட்டாலும், இதய சிகிச்சை மேற்கொண்டவர் என்பதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டோக்கியோ பாராலிம்பிக்; துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவுக்கு 2 பதக்கம்

G SaravanaKumar

பூமிக்கடியில் இருந்து ரூபாய் நோட்டுகள் கண்டெடுப்பு!

G SaravanaKumar

34 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ்

EZHILARASAN D