உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இந்திய தொழிலதிபர் அதானி, 38-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஹின்டன்பர்க் அறிக்கையின் எதிரொலியால் கடும் சரிவை சந்தித்த அதானியின் தற்போதைய சொத்து மதிப்பு 33 புள்ளி 4 பில்லியன் டாலராக உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பெர்க் என்ற நிறுவனம், அதானி குழுமம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாக கடந்த மாதம் 25-ம் தேதி வெளியிட்டது. அதில், அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் நிதிநிலை அறிக்கையில் தவறாக தகவல்களை அளித்து பங்குச் சந்தைகளில் ஆதாயத்தைத் தேடுவதாக குற்றம்சாட்டியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத் தொடர்ந்து, அதானி குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள், பங்குசந்தைகளில் கடும் சரிவை சந்தித்தன. குழுமத்தின் நன்மதிப்பைப் பாதுகாக்க நிலுவையில் இருந்த கடன்களை அதானி குழுமம் திருப்பிச் செலுத்தியது. எனினும், அதனால் பங்குகளின் வீழ்ச்சியை தடுக்க முடியவில்லை.
Also Read : 2 ஆண்டு பின்னோக்கி சென்ற அதானியின் சொத்து மதிப்பு ! தொடந்து சறுக்கலில் அதானி குழும…
இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்குள் அதானி குழுமம் சுமார் ரூ.12.06 லட்சம் கோடி சொத்து மதிப்பை இழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஹிண்டன்பெர்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கை வெளியாவதற்கு முன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 120 பில்லியன் அமெரிக்க டாலா சொத்து மதிப்புடன் 3-ம் இடத்தில் அதானி இருந்தார். ஆனால், குழுமத்தின் சொத்து மதிப்பில் ஏற்பட்ட தொடர் வீழ்ச்சியால் சுமார் 80 பில்லியன் டாலா் சொத்துகளை இழந்து 33 புள்ளி 4 பில்லியன் சொத்து மதிப்புடன் 38-வது இடத்திற்கு கௌதம் அதானி தள்ளப்பட்டுள்ளார். குழுமத்தின் கூட்டு நிகர மதிப்பு கிட்டத்தட்ட $150 பில்லியன் குறைந்துள்ளதாக , BSE தரவு காட்டுகிறது.
இந்தநிலையில், இந்தியாவின் முகேஷ் அம்பானி, 80 பில்லியன் டாலா் சொத்து மதிப்புடன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பி. ஜேம்ஸ் லிசா