கலகலப்பு 3 குறித்து அப்டேட் வெளியிட்ட குஷ்பு!

கலகலப்பு – 3 திரைப்படம் குறித்து நடிகை குஷ்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கலகலப்பு’. விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், மனோபாலா, ஓவியா, அஞ்சலி…

கலகலப்பு – 3 திரைப்படம் குறித்து நடிகை குஷ்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கலகலப்பு’. விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், மனோபாலா, ஓவியா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த இந்த திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்து அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம், ‘கலகலப்பு-2 என்ற பெயரில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது.இதில் ஜீவா, ஜெய் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதுகலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதையும் படியுங்கள் : கங்கனா ரனாவத்தின் ‘எமர்ஜென்சி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இதையடுத்து, விரைவில் ‘கலகலப்பு 3’ உருவாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், ‘கலகலப்பு 3’ படத்தின் அப்டேட்டை நடிகை குஷ்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:

” விரைவில் ‘கலகலப்பு 3’ உருவாக இருப்பதாகவும், நடிகர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.