நடிகர் விக்னேஷ் மற்றும் முகமது தமீம் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என இரிடியம் வழக்கில் கைது செய்யப்பட்ட ராம் பிரபு ராஜேந்திரன் புகார் அளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராம் பிரபு ராஜேந்திரன் என்பவர், இரிடியம் விற்பனை மூலம் பெரும் பணம் ஈட்டலாம் என கூறி சென்னையை சேர்ந்த முகமது தமீம் என்பவரிடம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இதேபோல் தன்னிடமும் 1 கோடியே 82 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த நடிகர் விக்னேஷ் புகார் மனு அளித்தார். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் எதிராக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் ராம் பிரபு ராஜேந்திரன் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: ‘சிபிசிஐடி விசாரணையை பாஜக தொடர்ந்து கண்காணிக்கும்’ – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
அதில் இரிடியம் தொழில் செய்வதாக கூறி பணம் பெறவில்லை என்றும், விவசாயத்தை மேம்படுத்துவதற்காக மட்டுமே 2 பேரிடம் இருந்தும் கடன் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், முகமது தமீமிடம் வாங்கிய கடனை அடைத்து விட்டதாகவும், நடிகர் விக்னேஷிடம் 9 லட்சம் மட்டுமே கடன் வாங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
பொய்யான குற்றச்சாட்டுகளை கூறும் இருவர் மீதும், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் எனவும் ராம் பிரபு ராஜேந்திரன் மனுவில் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.