31.7 C
Chennai
April 28, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க நடவடிக்கை-அமைச்சர் அன்பில் மகேஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் +2 மாணவி உயிரிழந்த விவகாரத்தில் நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் அந்தப் பள்ளியை போராட்டக்காரர்கள் சூறையாடினார். அப்போது மாணவ-மாணவிகளின் சான்றிதழ்களையும் தீ வைத்துக் கொளுத்தினர்.

அந்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை திருப்பி அளிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் மாணவர்களின் சான்றிதழ்கள் எரிக்கப்பட்ட நிலையில் அவற்றை திரும்ப வழங்க வருவாய்த் துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

முதலமைச்சர் அறிவுறுத்தல்படி நேற்று எ.வ.வேலு தலைமையில் பள்ளியை ஆய்வு செய்தோம். நீதிமன்ற வழக்கு காரணமாக பெற்றோரை நேற்று நேரில் சந்திக்க முடியவில்லை. மறைந்த மாணவியின் தாய் M. com படித்துள்ளார். அவர் கேட்டுள்ளபடி அவருக்கு பணி வழங்குவது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினோம்.

பள்ளியில் சான்றிதழ்கள் எரிந்துள்ளன . அருகில் உள்ள தனியார் பள்ளிகள்
சக்தி பள்ளிக்கு உதவ தயாராக இருப்பதாக கூறியுள்ளன. நாற்காலி உட்பட அனைத்தும்
தூக்கி செல்லப்பட்டுள்ளன. இன்று காலை 10.30 க்கு முதல்வர் வீடியோ
கான்பரன்சில் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அமைச்சருடன்
ஆலோசனை நடத்த உள்ளார். இதில் நாங்கள் பள்ளியில் நடந்தது என்ன, தீர்வு என்ன,
மாணவர்களின் பெற்றோரின் மனநிலை என்ன என்பது குறித்து முதல்வரிடம் கூற உள்ளோம்.

அதனை தொடர்ந்து முதலமைச்சர் அறிவுறுத்தல்படி நடவடிக்கை எடுக்கப்படும்.  சான்றிதழ்கள் எரிந்ததை பலர் அழுதபடி எங்களிடம் காட்டினர். சான்றிதழ்களில் புகை
வாடை இப்போதும் அடிக்கிறது. கலவரம் திட்டமிட்டு நடைபெற்றுள்ளது என்றும்
கோபத்தில் ஏற்படவில்லை என நீதிமன்றமே கூறி உள்ளது.

மாற்றுச் சான்றிதழ்கள் மட்டுமின்றி பிறப்பு சான்றிதழ் உட்பட மாணவர்களின் பல சான்றிதழ்கள் எரிந்துள்ளன. எனவே வருவாய் துறை மூலம் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு செய்து கொடுப்போம். மாணவர்களுக்கு டூப்ளிகேட் டிசி எளிதில் வழங்க முடியும்.

மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்படாமல் இருப்பது தொடர்பாக முதலமைச்சருக்கு
அறிக்கை வழங்க உள்ளோம். மாணவியின் அருகில் அமர்ந்து படித்த ஒரு மாணவி அந்த
பள்ளியிலேயே படிக்க விரும்புவதாக எங்களிடம் கூறினார்.

மாணவி இறந்து 24 மணி நேரத்திற்குள் துறை ரீதியான விளக்கம் மாவட்ட ஆட்சியருக்கு
வழங்கப்பட்டு விட்டது. அந்தப் பள்ளியின் அருகே 5 அரசுப் பள்ளிகள், 17 தனியார்
பள்ளிகள், 2 கல்லூரிகள் இருக்கிறது. இதை அந்த மாணவர்களுக்கு பயன்படுத்த
முடியுமா என முதல்வரிடம் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுப்போம்.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பின் போதே, போலி
நபர்கள், வெளிமாநிலத்தவர்களைக் கண்டறிந்து நீக்க நடவடிக்கை. TRB
தேர்வுகளுக்கும் கட்டாய தமிழ்த்தாள் நடைமுறையை கொண்டுவருவதற்கான அரசாணை
விரைவில் பிறப்பிக்கப்படும் என்றார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading