24 C
Chennai
December 4, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம்

பள்ளி மாணவனின் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்.

விழுப்புரத்தில் வீட்டின் அருகே கீழே கிடந்த செல்போன், 2 ஆயிரம் பணத்தை அரசு
பள்ளிமாணவன் எடுத்து வந்து விழுப்புரம் எஸ் பி ஸ்ரீநாதாவிடம் ஒப்படைத்த
மாணவனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

 

விழுப்புரம் நகரபகுதியான அமைச்சாரம்மன் கோவில் வீதியை சேர்ந்த 12 வயது சிறுவன்
ஜீவா தனது வீட்டின் வாயிலில் முன்பு கேட்பாரற்று கிடந்த பையினை எடுத்து
பார்த்ததுள்ளார். அப்போது பையில் 15 ஆயிரம் மதிப்பிலான செல்போன், 2 ஆயிரம்
ரொக்க பணம், 3 ஏ டி எம் கார்டுகள் இருந்துள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

உடனே அந்தச் சிறுவன் அந்தப் பொருட்களை எடுத்து வந்து தன் தந்தையிடம் கொடுத்துள்ளான், மேலும் உரிமையாளரிடம் அதை ஒப்படைக்க வேண்டும் என்றும் தன் தந்தையிடம் கூறியுள்ளான். இதனையடுத்து அந்த பணத்தையும், செல்போனையும் தொலைத்தவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நல்லெண்னத்தில் பள்ளி சிறுவன் கேட்பாரற்று கிடந்த செல்போன், 2 ஆயிரம் பணத்தை விழுப்புரம் எஸ் பி ஸ்ரீநாதாவிடம் இன்று ஒப்படைத்தார்.

இதனையடுத்து மாணவனை ஊக்குவிக்கும் விதமாக, எஸ். பி. நேர்மையாக செயல்பட்ட மாணவனை பாராட்டி சாக்லேட், பரிசினை வழங்கினார். மேலும் பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் நேர்மையாக செயல்பட்ட அரசு பள்ளி மாணவனை போல் அனைத்து மாணவர்களும் செயல்பட வேண்டும் என எஸ் பி ஸ்ரீநாதா வலியுறுத்தியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy