உலகப் புகழ்பெற்ற குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆடி கொடை விழா நடைபெற்று வருவதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அழகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும் பாதயாத்திரையாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தசரா புகழ்பெற்ற தூத்துக்குடி
மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில்
ஆடி மாதம் நடைபெறும் கோயில் கொடை விழா பிரசித்தி பெற்றது.
இந்நிலையில் கோயில் கொடை விழா நிகழ்ச்சி மாக்காப்பு தீபாரதனை உடன் இ
தொடங்கியது. இதனை அடுத்து இன்று மதியம் கோயிலில் சிறப்பு பூஜைகள்
செய்யப்பட்டது. தொடர்ந்து நய்யாண்டிமேளம், செண்டை மேளம், தப்பட்டை ,வில்லிசை,
மற்றும் கனியான் உள்ளிட்ட மேளதாளங்கள் முழங்க அம்மன் கும்பம் சுமந்து கோயில்
வளாகம் சுற்றி வந்து மகாமண்டபத்தில் ஆடியது. இதனை அடுத்து கும்பம் எடுத்து
வீதி உலா வந்தது.
இதைத்தொடர்ந்து இன்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை
தந்துள்ள ஏராளமான பக்தர்கள் வாயில் அழகு குத்தியபடியும் தீச்சட்டி ஏந்தியும்
பாத யாத்திரையாக கோயிலுக்கு சென்று வேண்டுதல்களை நிறைவேற்றினர்.







