காரைக்கால் அருகே கரை ஒதுங்கிய 80 அடி திமிங்கலத்தை ஏழு மணி நேரம் போராடி மீனவர்கள் கடலில் விட்டனர்.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த வாஞ்சூர் பகுதியில் கடற்கறையில் 80 அடி நீளம் உள்ள நீல ராட்சச திமிங்கலம் உயிருடன் கரை ஒதுங்கியது. இதனை மீனபிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் பார்த்துள்ளனர். மீனவர்கள் மவாட்ட நிர்வாகம், மீன்வளத் துறைக்கு தகவல் அளித்தனர். ஆனால் அதிகாரிகள் வந்து திமிங்கலத்தை பார்வையிட்டப்படி, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நின்றுக்கொண்டிருந்தனர்.
மேலும் திருப்பட்டினம் பட்டினச்சேரி மீனவ கிராம மீனவர்கள் 30-க்கு மேற்பட்டோர் நான்கு படகுகளில் சென்று திமிங்கிலத்தை விடுவதற்காக மீனவர்களுக்கு உதவியாக தனியார் துறைமுகத்திலிருந்து விசைப்படகு வழங்கப்பட்டு திமிங்கலத்தை கயிறு கட்டி இழுத்து செல்ல முடிவு செய்தனர். பின்னர் 7 மணி நேரத்திற்கு பின் மீனவர்கள் நீலத் திமிங்கலத்தை உயிருடன் கயிறு கட்டி இழுத்து சென்று நடுக்கடலில் விட்டனர்.
பின்னர் திமிங்கலம் நடுகடலுக்கு நீந்திச் சென்றது. அரசு அதிகாரிகள் கண்டுக்கொள்ளாததால் மீனவர்களே திமிங்கலத்தை கடலில் விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
—-அனகா காளமேகன்






