சித்திரை முதல் நாளையொட்டி ஒருவருக்கொருவர் வெற்றிலை பாக்கு பரிமாறிக் கொள்ளும் பாரம்பரிய திருவிழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே 65 கிராமங்களை உள்ளடக்கிய பகுதி வெள்ளலூர் நாடு என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை முதல் நாளில் ஊர் பெரியவர்கள் அனைவரும் ஒன்றுகூடி, வெற்றிலையும், வெற்றியின் சின்னமான பாக்கையும் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் கொடுத்து அனுப்புவர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: ‘ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தில் பங்கேற்கிறது அதிமுக’
இவ்வாறு வழங்கப்படும் வெற்றிலை, பாக்கை வைத்து வணங்கி தொழில் தொடங்கும்போது வெற்றியே கிட்டும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆண்டு தோறும் நடைபெற்று வந்த இந்த பாரம்பரிய திருவிழாவானது கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், சித்திரை முதல் நாளையொட்டி ஒருவருக்கொருவர் வெற்றிலை பாக்கை இன்று பரிமாற்றிக்கொண்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கிராம பெரியவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.