தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கத்திற்கு எதிரான நடவடிக்கை குறித்து ஆய்வுக் கூட்டம் – சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனை!

தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம் அதிகமாகிவிட்டதாக அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்திருந்த…

தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.

தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம் அதிகமாகிவிட்டதாக அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்திருந்த நிலையில், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் இன்று (மே. 11) காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் உள்துறைச் செயலாளர், காவல்துறை டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட பல வகை போதை பொருள்கள் பயன்பாடு அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் சூழலில், மேற்கண்ட ஆலோசனைக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

போதைப்பொருள்களை முழுமையாகக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளும், முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.