29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசு பேருந்தில் தவறி விழுந்து பள்ளி மாணவன் உயிரிழப்பு

அரசு பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பழைய விளாங்குடி பகுதியைச் சேர்ந்த 14 வயதான பிரபாகரன் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள பிரிட்டோ அரசு உதவிபெறும் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவந்துள்ளார். இந்நிலையில் வாரவிடுமுறை முடிந்து இன்று மாணவன் பிரபாகரன் பள்ளிக்கு செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறி பயணம் செய்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது ஆரப்பாளையம் அருகே பேருந்துசென்றுகொண்டிருந்தபோது படியின் அருகில் பயணம் செய்த மாணவன் திடீரென தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார். இதை பார்த்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பேருந்தை நிறுத்தி விட்டு மாணவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து சிகிச்சையில் இருந்த மாணவன் சிறிது நேரத்திலயே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கரிமேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். பள்ளி மாணவன் அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading