காதலியின் கிரிமினல் திட்டம்; காதலன் எடுத்த விபரீத முடிவு

ஆரணி அடுத்த கஸ்தம்பாடியில் சமாதான பேச்சுக்கு வரவைத்து அடியாட்களை வைத்து காதலனைத் தாக்கியதால் மனமுடைந்த காதலன்,உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கஸ்தம்பாடி பகுதியைச் சார்ந்த ஏழுமலை-செல்வராணி இவர்களின் மகனான சாம்ராஜ்…

ஆரணி அடுத்த கஸ்தம்பாடியில் சமாதான பேச்சுக்கு வரவைத்து அடியாட்களை வைத்து காதலனைத் தாக்கியதால் மனமுடைந்த காதலன்,உயிரை மாய்த்துக்
கொண்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கஸ்தம்பாடி பகுதியைச் சார்ந்த ஏழுமலை-செல்வராணி இவர்களின் மகனான சாம்ராஜ் என்ற இளைஞர் சென்னையில் தனியார் கம்பனியில் வேலை பார்த்து வந்துள்ளான்.

இந்நிலையில் அதே பகுதியில் ஒரு பெண்ணுக்கும் சாம்ராஜிக்கும் காதல் மலர்ந்துள்ளன. இந்நிலையில் இருவரும் சந்திருந்து பேச்சுவார்த்தையில் அதனைக் கண்ட பெண்ணின் தகப்பனார் காதலைக் கண்டித்துள்ளார். சாம்ராஜை அடித்து அறிவுரை சொல்ல வடுக்கசாத்து பகுதியிலிருந்து இரண்டு அடியாட்களை வரவைத்து அடித்ததாகவும் இதனால் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு  உயிரை மாய்த்துக் கொண்டார். மேலும் வெளியூர்களிலிருந்து ஆட்களை வரவைத்து என்மகனை அடித்து துன்புறுத்தியவர்கள் மீது வழக்குப்பதிந்து உடனே கைது செய்யக் கோரி களம்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு காவல் துறையினர்களிடம் முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். இதனால் காவல் துறையினர்கள் அவர்கள் மீது வழக்குப்பதிந்து உள்ளோம் என்று பேசி சமாதானம் படுத்திய நிலையில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். காதலைப் பிரிக்கப் போராடிய கலத்தில் அடியாட்களை வைத்து காதலனை அடித்து மனஉலசலில் வேதனையடைந்த காதலன் உயிரை மாய்த்துக்
கொண்ட சம்பவம் பெறும் சோகம் நிலவியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.