விளாத்திகுளம் அருகே , சூரங்குடி வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 60 லட்ச ரூபாய் மதிப்பிலான, தடை செய்யப்பட்ட சுறா மீன் திமில் , திருகை மீன் செதில் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் , விளாத்திகுளம் அருகே சூரங்குடி வழியாக இலங்கைக்கு தடை
செய்யப்பட்ட சுறா மீன் திமிழ், கொண்டு சொல்லப்பட உள்ளதாக கியூ பிரிவு மற்றும்
சூரங்குடி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதனால், க்யூ பிரிவு
ஆய்வாளர் விஜய் அனிதா, உதவி ஆய்வாளர் ஜீவமணி , தர்மராஜ் உள்ளிட்டோர்
அவ்வழியாகச் வாகனங்களை சோதனை செய்தனர்.
அப்போது , அவ் வழியாக சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் , தடை செய்யப்பட்ட சுறா மீன் திமில் 10 மூட்டைகள், திருக்கை மீன் செதில் 11 மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. மேலும், 21 மூட்டைகளில் இருந்த சுறா மீன் ,திருக்கை மீன் செதில்களை பறிமுதல் செய்தனர் . இந்த வாகனத்தை ஓட்டி வந்த , ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரை , கைது செய்து க்யூ பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
—கு.பாலமுருகன்