திருச்சி மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டரில் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது.
மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டரில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக மருத்துவமனை பணியாளர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறியதையடுத்து, ஆபரேஷன் தியேட்டரை திறந்து பார்த்தபோது 50 வயது மதிக்கத்தக்க பெண் அழுகிய நிலையில் சடலமாக இருந்தது தெரிய வந்ததுள்ளது.
இதனையடுத்து மருத்துவமனை சார்பில் உடனடியாக மண்ணச்சநல்லூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து,சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர்.இது குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், மருத்துவமனையில் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், எப்போது அந்தப் பெண் மருத்துவமனைக்கு வந்தார் அல்லது மர்மமான முறையில் இறந்தவரின் உடலை யாரும் கொண்டு வந்து போட்டு சென்றார்களா என்கிற கோணத்திலும் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவ பத்திரிக்கையாளர் – கோகுலப்ரியா







