சென்னையை தொடர்ந்து, கோவை மற்றும் மதுரையிலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார்.
இந்த பட்ஜெட்டில் திமுக தேர்தல் அறிக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளான , குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவது, சென்னை அண்ணாசாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 4 வழி மேம்பாலம் அமைத்தல், முதலமைச்சரின் முக்கிய திட்டமான காலை உணவுத் திட்டம் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவாக்கம செய்தல், சென்னையில் சர்வதேச விளையாட்டு மையம் அமைத்தல் , மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் உதவி வழங்குதல் , பெண் தொழில் முனைவோருக்கு சிறப்பு திட்டம், உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.
அந்த வகையில், சென்னையை தொடர்ந்து, கோவை மற்றும் மதுரையிலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
இதில் மதுரையில் 8,500 கோடி ருபாய் செலவிலும், கோவையில் ரூ.9,000 கோடி ருபாய் செலவிலும், மெட்ரோ ரயில் சேவை செயல்படுத்தப்படும் எனவும், பூந்தமல்லி வழித்தடம் செப்டம்பர் மாதம் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று அறிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா