பொன்னமராவதியில் அருகே உள்ள கருப்புகுடிபட்டி கிராமத்தில் கண்டனி கம்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. மீன் பிடித்தோர் கைகளுக்கு நாட்டு வகை மீன்களான ஜிலேபி,கெண்டை,அயிரை, கட்லா,விரால் உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் கிடைத்தன
புதுக்கோட்டை, பொன்னமராவதியில் அருகே உள்ள கருப்புகுடிபட்டி கிராமத்தில் கண்டனி கம்மாயில் மீன்பிடித்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பொதுவாக பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர்,
கோடைகாலத்தில் விவசாய பாசன கண்மாயில் நீர் வற்றும் கண்மாய்களில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக ஒன்று கூடி கலந்து கொள்ளக்கூடியதே இந்த மீன்பிடித் திருவிழாவாகும்.
நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும் ஊர் ஒற்றுமையாகாக இருக்கவும் இந்த
மீன்பிடித் திருவிழா நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டும் பொன்னமராவதி பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நாள்தோரும் மீன்பிடித்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற மீன்பிடித்திருவிழாவில், ஒரே நேரத்தில் கிராம மக்கள் போட்டி போட்டுக் கொண்டு கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறைப்படி மீன்பிடி உபகரணமான ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு லாபகரமாக மீன்பிடிக்கத்தொடங்கினர். அதில் ஒவ்வொருத்தர் கைகளுக்கும் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. அதனை மகிழ்ச்சியுடன் மக்கள் வீட்டிற்க்கு எடுத்துச்சென்றனர்.








