சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ
விபத்தை, தீயணைப்பு வீரர்கள் போரடி தீயை அனைத்தனர். இதில்
2 லட்ச ரூபாய் மதிப்பிலான கரும்புகள் எரிந்தன.
சேலம் மாவட்டம் , ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள கொல்லப்பட்டிபுதூர் பகுதியை
சேர்ந்தவர் ஆறுமுகம் .இவர் தனக்கு சொந்தமான நான்கு ஏக்கர் தோட்டத்தில்
கரும்பு சாகுபடி செய்தார். இந்த கரும்புகள் இரண்டு மாதத்தில் அறுவடை
செய்வதற்கு தயாராக இருந்தது. மேலும், கரும்பை விலைக்கு வாங்க வியாபாரிகள்
பலரும் தோட்டத்தை பார்த்து வந்தனர்.
இந்நிலையில், பக்கத்து தோட்டத்தில் வெட்டப்பட்டிருந்த கரும்பு சக்கைகளை தீ
வைத்து எரித்துள்ளனர். அப்போது அந்த தோட்டத்தில் எரிந்து தீ பொறிகள் காற்றில்
பறந்து வந்து தோட்டத்தில் விழுந்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கரும்பு தோட்டம்
எரிவதை பக்கம் உள்ள விவசாயிகள் ஆறுமுகத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும்,
அப்பகுதி பொதுமக்கள் தண்ணீரை அடித்து தீயை அணைக்க முற்பட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால், தோட்டம் முழுவதும் தீ பிடித்தால், தீயை அணைக்கவோ, கட்டுபடுத்தவோ
முடியவில்லை. இதையடுத்து , ஓமலூர் தீயணைப்பு நிலையத்திற்கு
தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி
அடித்து தீயை அணைக்க துவங்கினர். தொடர்ந்து, தீயணைப்பு வீரர்களும், கிராம
மக்களும் இணைந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர்.
மேலும், வேறு இடங்களுக்கு தீ பரவாத வகையில் வயலில் தண்ணீர் பாய்ச்சி, தடுத்தனர்.
இருந்த போதும் சுமார் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான கரும்புகள் எரிந்து வீணாகியது.
மேலும், உரிய இழப்பீடு வழங்கவும், வேளாண்மை துறை அதிகாரிகள் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தீ விபத்து குறித்து கருப்பூர்
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
—- கு.பாலமுருகன்