விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே அரசுப் பள்ளி மாணவர்களை, ஒரு நாள் கிராம கல்வி சுற்றுலாவுக்கு விவசாயி கிருஷ்ணகுமார் அழைத்துச் சென்றார்.
காரியாபட்டி அருகே மேலத்துலுக்கன்குளத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில், 1 முதல் 5 வகுப்பு வரை சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களுக்கு வாழ்க்கையில் பல விஷயங்களை கற்று கொள்வதற்காக , ஒரு நாள் கிராம கல்வி சுற்றுலா அழைத்து செல்ல மேலத்துலுக்கன்குளம் பகுதியை சேர்ந்த விவசாயி மற்றும் சமூக ஆர்வலரான கிருஷ்ணகுமார் என்பவர் முடிவு செய்தார்.
சுற்றுலா என்றவுடன் சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்லாமல் , இந்த விவசாயி தனது சொந்த செலவில் பேருந்து பிடித்து விவசாயம், வாழ்க்கையில் எவ்வாறு பயன் பெறுகிறது என்பதை காட்ட அழைத்து சென்றார். மேலும், பள்ளி மாணவர்களை மதுரை விமான நிலையத்தில் விமானம் ஏறுவது , தரை இறங்குவது, விமான நிலைய செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்புகள் குறித்தும், படிப்பு மற்றும் வேலையின் விபரம் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், வாடிப்பட்டியில் உள்ள விவசாயிகளுக்கு பயன்படும் டாஃபே டிராக்டர் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு மாணவர்களை அழைத்துச் சென்று , விவசாயிகள் பயன்படுத்தும் டிராக்டர் உற்பத்தியாகுவதை நேரில் பார்வையிட்டனர். மேலும் தயாரிக்கப்பட்ட டிராக்டரை வெளிநாடுகளுக்கு அனுப்புவதையும் பார்வையிட்டனர்.
தொடர்ந்து, அழகர்கோவில் மற்றும் பழமுதிர்ச்சோலை ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச் சென்றார். மேலும் , தமிழர்களின் பாரம்பரியமாக திகழும் கீழடி அருங்காட்சியத்திற்கும் அழைத்து சென்று , தமிழர்களின் பண்பாட்டை மாணவர்களுக்கு எடுத்துரைத்து விளக்கம் அளித்தார். இந்த விவசாயி கிருஷ்ணக்குமாரின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
—கு.பாலமுருகன்