செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை-திருச்சி தேசிய
நெடுஞ்சாலையில் இன்று (மார்ச் 12) காலை தனியார் பேருந்தும், கன்டெய்னர் லாரியும் உரசி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் பேருந்தின் படியில் தொங்கியபடி பயணித்த மோனிஷ், கமலேஷ் உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், 5 க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப் பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்