வேலூரில் 85 வயதுடைய தாய்மாமன் அரவணைப்பில் 60 வயது முதியவருக்கு காது குத்தும் விழா குதூகலமாக நடந்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த மருதுவல்லி பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட
ஏரிக்கோடி எனும் கிராமத்தில் வசித்து வருபவர்கள் முனிவேல் (60) மற்றும் ராஜா
வயது (55) ஆகிய இருவரும் கூலி தொழில் செய்து குடும்பத்துடன் வசித்து
வருகின்றனர். இவர்களுடன் பிறந்தவர்கள் 5 ஆண்கள் 3 பெண்கள் என மொத்தம் எட்டு பேர். இதில் முனிவேல், ராஜா என்பவர்களை தவிர மற்றவர்கள் திருப்பதியில் சென்று சிறுவயதிலேயே மொட்டை அடித்து காது குத்து விழா நடத்தியுள்ளனர்.
இவர்கள் இரண்டு பேருக்கும் நேற்று வரை காது குத்தாமல் இருந்து வந்துள்ளது. இதனை
ஊர் மக்கள் கிண்டல் செய்து வந்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் குடும்பத்தார்
ஒன்றிணைந்து இரண்டு பேருக்கும் காது குத்து விழா நடத்த வேண்டும் என ஏற்பாடுகள்
செய்திருந்தனர்.
இந்நிலையில் இன்று குலதெய்வம் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து கிடா வெட்டி
காது குத்து விழா நடைபெற்றது. இதில் 60 வயதான முனிவேல் என்பவருக்கு மற்றும்
55 வயதான ராஜா என்பவருக்கும் தாய் மாமனான 85 வயது உடைய தங்கவேல் என்பவரின்
மடியில் அமர்ந்து காது குத்து விழா நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட
வகைவகையான வரிசை தட்டுகளை வைத்து ஆரவாரம் செய்தும் மகிழ்ந்தனர். ஒற்றுமையாக கோலாகலமாக நடந்தேரிய இந்த நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.







