மதுரை மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 8 கோடியே 11 லட்சத்து, 88 ஆயிரத்து, 848 ரூபாய் அபராதமாக வசூலித்திருப்பதாக என மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பில் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் விபத்துகளைக் குறைக்கும் வகையில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். தொடர்ந்து சாலை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக அபராதம் விதிக்கப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுவருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் மதுரை மாநகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் இரண்டாவது வாரம் வரை மாநகர் பகுதிகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 5லட்சத்து 28ஆயிரத்து 288 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் தலைக்கவசம் அணியாத 3லட்சத்து 20ஆயிரத்து 385வழக்குகளும், ஆயிரத்து 449 மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கும், விதிகளை மீறி நம்பர் பிளேட் பயன்படுத்தியாக 11 ஆயிரத்து 32 பேர் மீதும், வாகனம் ஓட்டும் போது செல்லும் பயன்படுத்திய 7 ஆயிரத்து 900ஆயிரம், அதிவேகமாக வாகனத்தை இயக்கிய 4 ஆயிரத்து 837 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும், 4 சக்கர வாகனங்களில் சீல் பெல்ட் அணியாமல் இயக்கியதாக 25 ஆயிரத்து 332 பேருக்கும், மூன்று பேர் சென்றதாக 5ஆயிரத்து 7666 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சுமார் 8 கோடியே 11 லட்சத்து, 88 ஆயிரத்து 848 ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து காவல்துறை தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது அபராத தொகை விதிப்பு அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் 99% சதவீதம் தலைக்கவசம் அணிந்து போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதாகவும் போக்குவரத்து தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபராதம் தொகையை ஆன்லைன் மூலமாக வாகன ஓட்டிகள் செலுத்துவதற்கான வசதிகள் உள்ளதால் பொதுமக்கள் உடனுக்குடன் செலுத்துவதாகவும் , சிலர் நீண்ட கால தாமதம் எடுத்துக்கொள்வதால் கூடுதலாக அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.