தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 750 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டு உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திருகோணமலைக்கு (இலங்கை) கிழக்கே சுமார் 470 கி.மீ., யாழ்ப்பாணத்திலிருந்து (இலங்கை) கிழக்கு-தென்கிழக்கே சுமார் 610 கி.மீ., காரைக்காலில் இருந்து 670 கி.மீ கிழக்கு-தென்கிழக்கே மற்றும் சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 750 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரமடைந்துள்ளது. மேலும் படிப்படியாக இன்று மாலை சூறாவளி புயலாக மாறி டிசம்பர் 8 காலை வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி தென்மேற்கு வங்காள விரிகுடாவை அடைய வாய்ப்பு உள்ளது.
இது தொடர்ந்து 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.