முக்கியச் செய்திகள்தமிழகம்

சென்னைக்கு 750 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய  தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 750 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டு உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திருகோணமலைக்கு (இலங்கை) கிழக்கே சுமார் 470 கி.மீ., யாழ்ப்பாணத்திலிருந்து (இலங்கை) கிழக்கு-தென்கிழக்கே சுமார் 610 கி.மீ., காரைக்காலில் இருந்து 670 கி.மீ கிழக்கு-தென்கிழக்கே மற்றும் சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 750 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரமடைந்துள்ளது. மேலும் படிப்படியாக இன்று மாலை சூறாவளி புயலாக மாறி டிசம்பர் 8 காலை வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி தென்மேற்கு வங்காள விரிகுடாவை அடைய வாய்ப்பு உள்ளது.

இது தொடர்ந்து 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

நடிகை கீர்த்தி சுரேஷூக்கு விரைவில் திருமணம்?

G SaravanaKumar

தேள் விஷத்தை வைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இளைஞர்!

Jayapriya

‘வேட்டையன்’ படப்பிடிப்பில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன்: வைரலாகும் புகைப்படம்!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading