தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 69 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
69 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்து, 2021-22ம் கல்வியாண்டு முதல் அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என குற்றம்சாட்டிய மத்திய அரசுக்கு எதிராக திமுக தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 69 சதவீத இட ஒதுக்கீடு நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்தப்படுமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பான நிலைப்பாட்டை ஒரு வாரத்தில் தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.







