29.7 C
Chennai
May 20, 2024
தமிழகம் செய்திகள்

சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் இடித்து அகற்றம்!

திருப்பத்தூர் மாவட்டம், புத்துக்கோயில் அருகே தேசிய நெடுஞ்சாலை
சர்வீஸ் சாலையில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 60 கடைகள் மற்றும் 6
வீடுகள் இடித்து தள்ளப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம், புத்துக்கோயில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே கடந்த 2004 ஆண்டு தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக, சாலையோரங்களில் உள்ள வீடு மற்றும் கடைகள் நில உரிமையாளர்களுக்கு அரசு சார்பில் பணம் வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு இடத்திற்கான பணம் வழங்கப்பட்டும், ஆக்கிரமிப்பு வீடு மற்றும் கடைகள் அகற்றப்படவில்லை.

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை துறை , காவல்துறை மற்றும் வருவாய்த்துறை
இணைந்து, சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வீடுகளை
இடித்தனர். சுமார் 60க்கும் மேற்பட்ட கடைகள் ஆறு வீடுகள் ஆக்கிரமிப்பு பகுதிகளில்
இருந்து அகற்றப்பட்டன. மேலும், வருகின்ற மாதத்தில் புத்துக்கோயில் திருவிழா
என்பதற்காக, சர்வீஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை பொதுமக்கள்
செல்வதற்கு பாதைகளாக சீராக அமைத்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், கோயில் எதிரில் இரண்டு கடைகள் எடுக்கப்படாமல் உள்ளது. இதனால், பொதுமக்களுக்கும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறை பொதுமக்கள்
செல்லும் சர்வீஸ் சாலையை சீரமைக்க வேண்டும் என்பது, மக்கள் கோரிக்கையாக
உள்ளது.

கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading