முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம் செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆறு மாத குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனையில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஆறு மாத குழந்தை கடத்தப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல் 12.30 மணியளவில் மருத்துவமனையில் இருந்து, பர்தா அணிந்த பெண், குழந்தையை எடுத்துச் செல்வது போல சிசிடிவி காட்சி பதிவாகியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதைத்தொடர்ந்து, குழந்தையைக் கடத்திய நபரைப் பிடிக்கவும், குழந்தையை மீட்கும் பணியிலும் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குழந்தை குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10,000 பரிசு வழங்கப்படும் எனவும் காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 1,556 பேருக்கு கொரோனா தொற்று

EZHILARASAN D

காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவிப்பு

Arivazhagan Chinnasamy

மருத்துவமனையில் ஆக்சிஜன் நிரப்பும்போது விபத்து; 22 பேர் உயிரிழப்பு!

Halley Karthik