10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டங்கள் குறைப்பு!

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டங்கள் குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி…

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டங்கள் குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டுவந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள காரணத்தால் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பெற்றோர்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக 50% பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட பாடப்பகுதிகள் அடங்கிய ப்ளு பிரிண்டையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply