யமுனை ஆற்றில் கிருஷ்ணர் சிலையை கரைக்க சென்ற 5 சிறுவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி நொய்டா மேம்பாலத்தின் கீழ் உள்ள யமுனை ஆற்றில் கிருஷ்ணர் சிலையை கரைக்க 18 இளைஞர்கள் சென்றுள்ளனர். சிலையை நீரில் மூழ்கடிக்கும் போது சிலை தண்ணீரில் சிக்கியதால் அதனை சரிசெய்ய 6 சிறுவர்கள் ஆற்றுக்குள் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக 5 சிறுவர்களும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். ஒரு சிறுவன் மட்டும் நீந்தி கரைசேர்ந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் 5 சிறுவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த விசாரணையில், உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் உள்ள சலர்பூர் கிராமத்தைச் சேர்ந்த அங்கித் (20), லக்கி (16), லலித் (17), பீரு (19) மற்றும் ரித்து ராஜ் (20) என தெரியவந்தது