செங்கோட்டையில் தமிழக சிபிசிஐடி காவல்துறையின் புதிய உளவு பிரிவில்
போலி பணி நியமன ஆணைகளை வழங்கி ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி கடையநல்லூர் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி. இவர் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அந்த புகாரில், தன்னை செங்கோட்டை பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தனக்கு தமிழக சி.பி.சி.ஐ.டி காவல் துறையில் புதிதாக நுண்ணறிவு உளவு பிரிவுக்கு ஆள் சேர்ப்பு பணியானது நடைபெற்று வருவதாகவும், அந்த பணியில் சேர்த்து விடுவதாகக் கூறி ரூ.40 லட்சம் பணத்தை பெற்றார். அதை தொடர்ந்து, வேலை பற்றி கேட்கும்போது சிபிசிஐடி உளவுப் பிரிவில் சார்பு ஆய்வாளராக தன்னை நியமித்துள்ளதாக கூறி ஒரு பணி நியமன ஆணையும் வழங்கி உள்ளார். ஆனால் அது போலி பணி நியமண ஆணை என்பது தெரிய வந்தது. அதை பற்றி கேட்கும் போது பணமும் தர முடியாது, வேலையும் வாங்கி தர முடியாது என கூறி என்னை மிரட்டினார் என அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதனை தொடர்ந்து, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் அந்த புகார் மனு மீது உரிய முறையில் விசாரணை மேற்கொண்டார். அதில் பார்த்தசாரதியை ஏமாற்றிய நபர் பாஜக நிர்வாகி என்பதும், அவர் செங்கோட்டை நகர முன்னாள் செயலாளர் என்பதும் தெரியவந்தது. அவர் பார்த்தசாரதியிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 40 லட்சம் மோசடி செய்ததும் உறுதியானது. தற்போது பாலகிருஷ்ணனை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ம. ஶ்ரீ மரகதம்