நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் அகமதாபாத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது. இதனை அடுத்து, அந்த அணி 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதில் ராஞ்சியில் நடைபெற்ற முதலாவது டி20 ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி, லக்னோவில் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி, டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
இந்நிலையில், இரு அணிகளும் மோதும், 3வது டி20 ஆட்டம், அகமதாபாத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. டி20 தொடரின் கடைசி போட்டி என்பதால், இதில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.