பாபர் மசூதி இடிப்பு வழக்கில், அத்வானி உட்பட 31 பேர் விடுவிப்பு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி உள்ளிட்ட 32 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அலகாபாத் உயர்நிதிமன்ற லக்னௌ கிளை தள்ளுபடி…

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி உள்ளிட்ட 32 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அலகாபாத் உயர்நிதிமன்ற லக்னௌ கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுட்ளளது.

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் எல்.கே.அத்வானி, உ.பி. முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங், பாஜக மூத்த தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினய் கட்டியார், பிரிஜ் பூஷண் ஷரண் சிங், சாத்வி ரிதம்பரா உள்பட 32 பேர் மீது கிரிமினல் வழக்கு நடைபெற்று வந்தது.

நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 2020, செப்.30ம் தேதி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து தீர்ப்பு அளித்தது. அதில், பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தின் போது எடுக்கப்பட்டதாக நம்பப்படும் வீடியோ பதிவுகள், புகைப்படங்கள் ஆகியவை அசலானவை என்பதை நீரூபிக்கும் வகையில் நீதிமன்றத்தில் உண்மை ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. ஆவண படத்தை ஆதாரமாக மட்டும் வைத்து இந்த வழக்கு முழுவதும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

கரசேவர்களுடன் பாபர் மசூதியை இடிக்கும் நோக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொடர்பில் இருப்பதற்கான ஆதாரங்களை சிபிஐ அதிகாரிகள் தாக்கல் செய்யவில்லை. பாபர் மசூதியை அவர்கள் திட்டமிட்டு இடிக்கவில்லை. தற்செயலாக நடந்துவிட்டது, என்று தெரிவித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், இவ்வழக்கு தொடர்பாக குற்றவாளிகளுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருந்தும் கூட விசாரணை நீதிமன்றம் அவர்களுக்கு தண்டனை அளிக்காமல் தவறு செய்துவிட்டது. ஆகையால், சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டாம் என்று அதில் கூறியிருந்தனர்.

இந்த மேல்முறையீட்டு மனு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேல் முறையீடு மனு செய்த இருவரும் பாபர் மசூதி வழக்கில் புகார்தாரர்களோ, பாதிக்கப்பட்டவர்களோ இல்லை என்பதால் இந்த மனுவை ஏற்க கூடாது என வாதிடப்பட்டது. கடந்த செப்.5ம் தேதி இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னௌ கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்த இருவரும் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்பதால், இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல. மனுதாரர்களுக்கு வழக்குடன் தொடர்பு இல்லாத காரணத்தால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாக கூறி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.