டெல்லி இந்தியா கேட் பகுதியில் சுதந்திர போராட்ட தியாகி சுபாஷ் சந்திரபோஷூக்கு 30 அடி உயர சிலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்திய சுதந்திர போராட்ட வீரரான சுபாஷ் சந்திரபோஷின் தியாகத்தை போற்றும் வகையிலும், அவரின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டும், டெல்லி இந்தியா கேட் பகுதியில் அமைந்துள்ள பழைய அமர் ஜவான் ஜோதிக்கு பின்னால் உள்ள விதானத்தின் கீழ் 30 அடி உயர சிலை நிறுவப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த அருண் யோகிராஜ் என்ற சிற்பி சுபாஷ் சந்திரபோஷின் 30 உயர சிலையை செதுக்கவுள்ளார். இவர் கேதார்நாத்தில் கடந்த ஆண்டு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட ஆதி சங்கராச்சாரியாரின் 12 அடி உயர சிலையை செதுக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிலையை செய்வதற்காக தெலங்கானா மாநிலத்திலிருந்து கருப்பு நிற ஜேட் கிரானைட் கல் தேர்வு செய்யப்பட்டு டெல்லிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சிலையின் வடிவமைப்பை கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நவீன கலை அருங்காட்சியகம் (நேஷனல் கேலரி ஆப் மாடர்ன் ஆர்ட்) குழுவினர் செய்துள்ளனர். இதற்கான பணிகள் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் முடிக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது.