ஓமலூர் அருகே வீட்டின் முன் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டைமாரியம்மன் கோயில் ஊராட்சி
வேலகவுண்டனூர் திருமலை நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயநாதன் 32 வயதான இவர் தனியார் கிரானைட் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திவ்யா 25 என்ற மனைவியும் ஹரிஷ் 3 வயது ஆண் குழந்தை ரக்ஷிதா 7 மாத பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் இவரது வீட்டிற்கு முன்பு தண்ணீர் தேக்கி வைப்பதற்காக தண்ணீர் டேங்க் கட்டப்பட்டுள்ளது. இதில் இருந்த மின் மோட்டார் பழுதடைந்ததால் மின் மோட்டாரை பழுது பார்க்க கொடுத்து இருந்தனர். இந்த நிலையில் இவரது மனைவி திவ்யா வீட்டில் உள்ள துணிகளை துவைப்பதற்காக தண்ணீர் டேங்க் மூடியை அகற்றிவிட்டு தண்ணீரை எடுத்து துணி துவைத்து கொண்டு இருந்துள்ளார். அப்போது 3 வயது குழந்தை ஹரிஷ் விளையாடி கொண்டு இருந்துள்ளான்.
பின்னர் திறந்த நிலையில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உள்ளான். இதை கவனிக்காத திவ்யா துணி துவைத்துவிட்டு வந்து பார்த்த போது குழந்தையை காணவில்லை அக்கம் பக்கம் தேடி பார்த்து விட்டு பின்பு தொட்டியில் பார்த்த போது குழந்தை தொட்டில் இருப்பதை அறிந்து சத்தம் போட அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 3 வயது குழந்தை இறந்ததால் அவர்கள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஓமலூர் பகுதியில் நடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரூபி.காமராஜ்.