தாயகம் திரும்பிய தமிழ்நாடு மீனவர்கள்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 29 தமிழ்நாட்டு மீனவர்கள் இன்று தாயகம் திரும்பினர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 29 மீனவர்கள் கடந்த ஜனவரி 27-ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை…

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 29 தமிழ்நாட்டு மீனவர்கள் இன்று தாயகம் திரும்பினர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 29 மீனவர்கள் கடந்த ஜனவரி 27-ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கைக்குக் கொண்டு சென்றனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின், வெளியுறவுத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தார். இது குறித்த நடவடிக்கையின் பேரில் 29 மீனவர்களையும் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து மருத்துவ பரிசோதனை மற்றும் 14 நாட்கள் தனிமைப் படுத்தலுக்குப் பிறகு மீனவர்கள் இன்று காலை சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தனர். அவர்களுக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு மீன்வளத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை அரசு விடுவிக்காத நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுத்து படகுகளை மீட்டுத் தருமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.