திருப்பூரில், மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 2,583 மது பாட்டில்கள் மண்ணில் ஊற்றி அழிக்கப்பட்டது.
திருப்பூர் மாநகர மதுவிலக்கு காவல்துறை சார்பில் , சட்டவிரோத மற்றும் முறைகேடாக விற்பனை செய்யப்படும் மது பாட்டில்கள் அவ்வப்போது பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றனர். மேலும், விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது விசாரனண மேற்கொண்டு,
வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் 247 வழக்குகளின் கீழ் 2583 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. இதனை, மாநகர மதுவிலக்கு போலீசார் கலால் கோட்ட அலுவலர் ராகவி முன்னிலையில், மண்ணில் ஊற்றி
அளித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
—கு. பாலமுருகன்