122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2022 ஆம் ஆண்டில் தீவிர வானிலை காரணமாக இந்தியாவில் 2,220 க்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“பொதுவாக டிசம்பர் மாதத்தில் வடகிழக்கு இந்தியா மற்றும் வட இந்தியாவில் கடுமையான குளிர் இருக்கும். ஆனால் இம்முறை இந்த இரண்டு பகுதியிலும் சராசரியான வெப்பநிலையை விட அதிகமான வெப்ப நிலை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த வெப்பநிலையும் அதிகரித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வழக்கமாக ஆண்டின் இறுதியில் டிசம்பர் மாதம் முழுவதும் கடும் குளிர் நிலவுவது வழக்கம். ஆனால் 2022ம் ஆண்டின் டிசம்பர் மாதம் முழுவதும் வெப்பமயமானதாக இருந்ததாகவும், இது 1901 ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் ஐந்தாவது வெப்பமான ஆண்டாக கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தது எனவும் ‘2022 இல் இந்தியாவின் காலநிலை’ என்ற தலைப்பில் இந்திய வானிலை ஆய்வுத் துறை நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு பல்வேறு தீவிர வானிலை நிகழ்வுகளில், இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் காரணமாக 50 சதவிகிதம் அளவிற்கு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள காலநிலை அறிக்கைகளின்படி, 787 (2021) மற்றும் 737 (2020) இல் இருந்து மொத்தம் 1,285 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் இறந்த 418 பேரில், 415 பேர் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழையால் இறந்துள்ளனர். மற்ற மாநிலங்களில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை காரணமாக ஒடிசா (168), ஜார்கண்ட் (122), மத்தியப் பிரதேசம் (116), உத்தரப் பிரதேசம் (81), ராஜஸ்தான் (78), சத்தீஸ்கர் (71), மகாராஷ்டிரா (64) மற்றும் அசாம் (64) என இறப்புகள் கணக்கிடப்பட்டுள்ளது.
நீண்ட கால சராசரியுடன் (1981-2010) ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு இந்தியா 0.51 டிகிரி செல்சியஸ் அதிக சராசரி ஆண்டு சராசரி நில மேற்பரப்பு காற்றின் வெப்பநிலையை பதிவு செய்ததாக (IMD) இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இன் அறிக்கை காட்டுகிறது. கடந்த ஆண்டு குளிர்காலத்தில் (ஜனவரி-பிப்ரவரி) சராசரி வெப்பநிலை சாதாரணமாக இருந்தபோதிலும், மீதமுள்ள 10 மாதங்களில் இது இயல்பை விட அதிகமாக இருந்தது என்றும் தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு நாட்டில் பருவமழைக்கு முந்தைய காலம் “விதிவிலக்காக வெப்பமாக” இருந்ததைக் குறிப்பிட்ட இந்திய வானிலை ஆய்வு மையம், “2022 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 6 நாட்களுக்கும் மேலாக வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் மற்றும் 8 டிகிரி செல்சியஸாக இருந்தது.
2022 , ஏப்ரல் 29 இல், இந்தியாவின் கிட்டத்தட்ட 70% வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஏப்ரல் இறுதியில் மற்றும் மே மாதத்தில், இந்தியாவின் கடலோரப் பகுதிகள் மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு வெப்ப அலை பரவியது. இந்த மாதங்களில் அசாதாரணமாக அதிக வெப்பநிலை தானியங்களை நிரப்புவதை மோசமாக பாதித்தது மற்றும் ஆரம்ப முதிர்ச்சியை ஏற்படுத்தியது” என்று அறிக்கை கூறுகிறது.
மேலும், கடந்த ஆண்டு, இந்தியாவின் வருடாந்திர மழைப்பொழிவு நீண்ட கால சராசரியில் 108 சதவீதமாக இருந்ததும், டிசம்பர் மாதம் மட்டும் 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் அதிகமான வெப்பம் பதிவாகி இருப்பதாகவும், சராசரி மாத வெப்பநிலை 21.49 டிகிரி செல்சியஸாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளது.