திருநெல்வேலி அருகே ஒரே நேரத்தில் 20 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மேலப்பாளையம் அருகில் உள்ள மேலக்கருங்குளம் பகுதி உள்ளது. விவசாய தோட்டங்கள் அதிகம் இருக்கும் இப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக நாய்கள் அதிகமாக வளர்க்கப்படுகின்றன. இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் பல வீடுகளில் நாய்களை காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, இன்று காலையில் மேலக்கருங்குளம் ஊர் முழுவதும் ஆங்காங்கே 20க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து கிடந்தன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து தகவல் தெரிவித்த அப்பகுதி மக்கள் பல நாய்கள் நீர் நிலைகளில் இறந்து கிடப்பதால் நீரில் விஷம் கலந்திருக்கும் அபாயம் ஏற்பட்டதுள்ளது. அதை மற்ற விலங்குகள் அருந்தும் முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், உயிரிழந்த நாய்களை போஸ்மார்டம் செய்து விஷம் வைத்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே விலக்குகளுக்கு விஷம் வைத்து கொல்வது சட்டப்படி மிகப்பெரிய குற்றம் என்றும் இதற்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனைகள் வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் விலங்கு நல ஆர்வலர் தங்கப்பாண்டி தெரிவித்துள்ளார்.
அண்மைகாலமாக இந்தியாவில் தெரு நாய்களின் தொல்லை தீராதப் பிரச்னையாக உள்ளது. அதிலும் குறிப்பாக கேரளா, தமிழ்நாட்டில் நாய்க்கடி, நாய்களின் அச்சுறுத்தல் ஆகியவற்றால் பாதிக்கப்படும் மக்கள் அவற்றை கொல்லும் விரக்திக்கு தள்ளப்படுகின்றனர். ஆனால் நாய்களைக் கொல்வது எந்த வகையிலும் தீர்வாகாது எனக் கூறும் விலங்குகள்நல ஆர்வலர்கள், அவற்றிற்கு தடுப்பூசி போடுவது, கருத்தடை செய்வது ஆகியவற்றின் அவசியத்தை எடுத்துரைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா