விருதுநகர் அருகே குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் தற்போது மீண்டும் ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் நான்கு தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமீபகாலமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் தொடர் விபத்து ஏற்பட்டு வருகிறது. முன்னதாக கடந்த மாதம் 12ம் தேதி சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் 25 பேர் உயிரிழந்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக பட்டாசு ஆலைகளில் ஆய்வுகளை மேற்கொள்ள வட்டாட்ச்சியர்கள் தலைமையிலான 7 குழுக்கள் அமைக்கப்பட்டது.
இந்த ஆய்வுகளையடுத்து சிவகாசியையொட்டியுள்ள பகுதியில் 80 பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் மூலம் நேரடியாக 2 லட்சம் பேரும், மறைமுகமாக 3 லட்சம் பேரும் வேலை வாய்ப்பினை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.