நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 18,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் மூன்றாவது அலை உருவாகி கொண்டே வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து வருகிறது. அதற்கேற்றாற் போல் நாடு முழுவதும் தொற்று பாதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. முதல் அலையில் ஏற்பட்டது போன்று தொடக்கத்தில் குறைவான எண்ணிக்கையில் பாதிவான கொரோனா தொற்று, நாளடைவில் அதிக எண்ணிக்கையில் உருமாறுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குறிப்பாக வடாமாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு சற்று உயர்ந்து கொண்டே செல்வதாக ஆய்வில் தெரியவருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய அரசு சம்மந்தப்பட்ட மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 18 ஆயிரத்து 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1.28 லட்சமாக உயர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. தொற்று பாதித்து புதிதாக 42 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 428-ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது.
கொரோனாவில் இருந்து 14 ஆயிரத்து 553 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4.29 கோடியாக அதிகதித்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் குணமடைந்தோர் விகிதம் 98.50 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேபோல் இந்தியாவில், இதுவரை 198.84 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10 லட்சத்து 21 ஆயிரத்து 164 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
– இரா.நம்பிராஜன்