பீகார் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் அறிவித்துள்ளார்.
பாகல்பூர் மாவட்டத்தில் 6 பேரும், வைஷாலி மாவட்டத்தில் 3 பேரும் பங்கா மற்றும் ககாரியா மாவட்டத்தில் தலா 2 பேரும் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். முங்கேர், கடிஹர், மதேபுரா மற்றும் சஹர்சா ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், பீகார் மாநில முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-மணிகண்டன்