பப்ஜி மதனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

போலீஸ் காவல் முடிந்த பப்ஜி மதனை, அடுத்த மாதம் 7 ஆம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க, சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பப்ஜி விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதிலும், விபிஎன் முறையில்…

போலீஸ் காவல் முடிந்த பப்ஜி மதனை, அடுத்த மாதம் 7 ஆம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க, சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பப்ஜி விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதிலும், விபிஎன் முறையில் ரகசியமாக விளையாடப் படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் பப்ஜிக்கு மாற்றாக “ஃப்ரீ பயர்” (Free Fire) எனும் விளையாட்டு இணையத்தில் அதிகம் தரவிறக்கம் செய்யப்படுகிறது. இந்த விளையாட்டுகளை எவ்விதம் சிறப்பாக விளை யாடுவது என்பது குறித்து, மதன் என்பவர் யூடியூப் சமூக வலைதளத்தில் வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.

இவர் தனது முகத்தை காட்டாமல் குரலை மட்டும் பதிவிட்டு வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்த நிலையில், அதில் ஆபாச வார்த்தைகளை பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியது. விளையாட்டில் தன்னுடன் ’சாட்’ செய்யும் பள்ளி சிறுமிகளின் வலைப்பக்கங்களுக்கு சென்று பாலியல் ரீதியாக பேசி அத்துமீறியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசாருக்கு புகார் வந்ததை அடுத்து, மதனை தேடி வந்தனர். தலைமறைவான அவரை, தருமபுரியில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவரை 2 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். பின்னர், 2 நாள் போலீஸ் காவல் முடிந்து பப்ஜி மதன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அடுத்த மாதம் 7 ஆம் தேதி நீதிமன்ற காவலில் வைக்க, சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, சிறையில் அடைக்கப்பட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.