இரண்டு ஆண்டுகளில், 12 லட்சம் மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி பயில சென்றுள்ளதாக மக்களவையில் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில் மக்களவை உறுப்பினர் ஹரீஸ் திவேதி, இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்க செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதா என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு பதிலளித்துள்ள மத்திய கல்வி அமைச்சகத்தின் இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார், உள்துறை அமைச்சகம் வழங்கிய தகவலின்படி 2019-2021 கல்வி ஆண்டில் 12.92 லட்சம் மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி பயில சென்றுள்ளதாக தெரிவித்தார். அதன்படி, 2019-ஆம் ஆண்டு 5.87 லட்சம் மாணவர்கள் உயர்கல்வி பயில வெளிநாடு சென்றுள்ளதாகவும்,
2020-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை குறைந்து 2.60 லட்சமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். 2021ம் ஆண்டில் 4.45 லட்சம் இந்திய மாணவர்கள் உயர்கல்வி பயில உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று உள்ளதாக கூறியுள்ள மத்திய கல்வி அமைச்சகம், வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்கள் தொடர்பான விபரங்கள் மத்திய கல்வி அமைச்சகத்தின் வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.